×

சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை ஓட்டேரி பின்னி மைதானத்தில் போதை ஊசி செலுத்தியதில் மயக்கம் அடைந்த இளைஞர் தீபக்நாத் (23) உயிரிழந்தார். தீபக்நாத் மயங்கி விழுந்து கிடந்த இடத்தில் மருந்துகள், ஊசிகள் கிடந்ததாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் தீபக்நாத் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் தீபக்நாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இளைஞரின் தாய் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Deepaknath ,Otteri Binny ground ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...